அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சியில் விஜய் பிறந்தநாளுக்கு அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


கள்ளக்குறிச்சியில் விஜய் பிறந்தநாளுக்கு அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சின்னசேலம் நகர பகுதியில் தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைத்தனர். சின்னசேலம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பலத்த காற்று வீசிய நிலையில், சாலையில் நடந்து சென்ற 13 வயது சிறுவன் மீது பேனர் விழுந்தது. உடன் அப்பகுதியில் இருந்தவர்கள் விழுந்த பேனரை அகற்றி, சிறுவனை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக சிறுவனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அனுமதியின்றி பேனர் வைத்ததாக ராவுத்தர் மகன் அக்பர், கஜாபாய் மகன் தாவுத் ஆகிய இருவர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

Tags

Next Story