நிழலியில் சட்டவிரோதமாக கள் இறக்கியவர் மீது வழக்கு பதிவு

நிழலியில் சட்டவிரோதமாக கள் இறக்கியவர் மீது வழக்கு பதிவு

காவல் நிலையம் 

நிழலியில் தென்னை மரங்களில் பானை கட்டி சட்டவிரோதமாக கள் இறக்கியவர் மீது ஊதியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த நிழலி கிராமம் என்.காஞ்சிபுரம் பகுதியில் வசித்து வருபவர் கனகராஜ் வயது 41. இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 2 முதல் 3 தென்னை மரங்களில் பானை கட்டி போதை தரக்கூடிய கள் இறங்கியதாக ஊதியூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊதியூர் போலிசார் தோட்டத்தில் சட்ட விரோதமாக கள் இயக்குவதற்காக தென்னை பாளையில் கட்டப்பட்டிருந்த பானைகளை சோதனையிட்டனர். அதன் அடிப்படையில் சுமார் 2 முதல் 3 மரங்களில் இருந்து இறக்கப்பட்ட சுமார் 4 லிட்டர் அளவுள்ள கள்ளை போலிசார் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கனகராஜ் என்பவரது மீது ஊதியூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story