பெண்ணை தாக்கிய 3பேர் மீது வழக்குப் பதிவு!

பெண்ணை தாக்கிய  3பேர் மீது வழக்குப் பதிவு!

வழக்குப் பதிவு

பெண்ணை தாக்கிய ஜவுளிக்கடை உரிமையாளர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு!
ஏரலில் பெண்ணை தாக்கியதாக ஜவுளிக்கடை உரிமையாளர் உட்பட 3பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் முதலியார் தெருவைச் சேர்ந்தவர் கணபதி மனைவி முருகலட்சுமி (46). இவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீட்டை இடித்து கட்டி வருகிறார். இந்நிலையில் கான்கிரீட் போட்டபோது கலவை மிஷினில் தூசி பறந்துள்ளது. அப்போது எதிர்வீட்டில் வசிக்கும் ஜவுளிக் கடை உரிமமையாளரான ராமகிருஷ்ணன் என்பவர் கட்டுமான பணிகளை நிறுத்துமாறு தகராறு செய்துள்ளார். இதையடுத்து முருகலட்சுமி இதனை தட்டிக் கேட்டோது ராமகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். மேலும் இதனை தடுக்க முயன்ற அவரது மகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த முருகலட்சுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஏரல் காவல் நிலையத்தில் முருகலட்சுமி புகார் அளித்துள்ளார். அதன் பேரில் ராமகிருஷ்ணன், அவரது அண்ணன் மாரிமுத்து, அண்ணி ராமலட்சுமி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story