மான் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு

மான் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு

பைல் படம் 

பன்றிகரடு வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் அவர்களுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்தனர்.

சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்துக்குட்பட்ட பன்றிகரடு வனப்பகுதியில் சிலர் மான் வேட்டையாடி கறி சமைப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனவர்கள் சுரேஷ், மணிகண்டன் மற்றும் வனக்காப்பாளர்கள் காப்புக்காடு பச்சைப்பாலி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மான் வேட்டையாடி அதன் கறிைய வைத்திருந்த 3 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் ஏற்காடு தாலுகா சொனப்பாடி கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் ராமர் (வயது 33), கரியராமன் மகன் ராமர் (20), மாதையன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து மான் கறி பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு மொத்தமாக ரூ.2½ லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் காஷ்யாப் ஷஷாங் ரவி உத்தரவிட்டார்.

Tags

Next Story