சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் மீது வழக்கு பதிவு

கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் மீது வழக்கு பதிவு. 12 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 7ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், அருகில் உள்ள விஸ்வநாதபுரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ். அப்போது, விஸ்வநாதபுரி அருகில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் சண்முகம் மனைவி சித்ரா வயது 48 என்பவர் அவரது வீட்டின் அருகாமையில் சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 12 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சித்ரா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story