அதிகாரிகளை மிரட்டிய பட்டாசு கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

அதிகாரிகளை மிரட்டிய பட்டாசு கடை உரிமையாளர்கள்  மீது வழக்கு பதிவு

சிவகாசியில் வருவாய்துறை அதிகாரிகளை மிரட்டிய பட்டாசு கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


சிவகாசியில் வருவாய்துறை அதிகாரிகளை மிரட்டிய பட்டாசு கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிவகாசி அருகே ஆய்விற்கு சென்ற அதிகாரிகளை மிரட்டிய பட்டாசு கடை உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆய்விற்கு சென்ற அதிகாரிகளை மிரட்டிய பட்டாசு கடை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சிவகாசி அருகே அனுப்பன்குளம் பகுதியில் வருவாய் ஆய்வாளர் விக்னேஸ்வரன்,விஏஓ காளியப்பன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராமலிங்காபுரத்தில் ஒரு பட்டாசு கடையில் அனுமதியின்றி தகர செட் அமைத்து அங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

அருகில் உள்ள கடை அனுமதியின்றி இயங்கியதும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து 2 கடைகளுக்கும் சீல் வைக்க முயன்றனர் அப்போது அங்கு வந்த பட்டாசு கடை உரிமையாளர்கள் ராமலிங்காபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகன் வடிவேல், சக்திவேல் மற்றும் ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த வடிவேல் மருமகன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.இது குறித்து 3 பேர் மீதும் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story