அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு

கரூர் மாவட்டத்தில் தகராறு செய்ததை தட்டி கேட்டதால், அண்ணனை தாக்கிய தம்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ராஜபுரம், மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் மனோகரன் வயது 60. இவரது உடன் பிறந்த சகோதரர் கணேசன் வயது 54. இவர்கள் வசிக்கும் பகுதியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் மே 4-ம் தேதி காலை 11:30 மணி அளவில் கணேசன் சாலை அமைக்கும் தொழிலாளர்களிடம் தன்னிச்சையாக சென்று தகராறு செய்துள்ளார். இதனைக் கண்ட மனோகரன் தனது தம்பியை தடுத்துள்ளார். இதனால், கோபமடைந்த கணேசன் தனது அண்ணன் என்றும் பாராமல் மனோகரனை இரும்புராடால் தாக்கி காயப்படுத்தி, மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் முன் நெற்றியில் காயம் அடைந்த மனோகரன், அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மனோகரன் அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கணேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல் துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story