ரூ. 73, 500 ஆயிரம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிரடி

ரூ. 73, 500 ஆயிரம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிரடி

பணம் ஒப்படைப்பு


வீரசிகாமணியில் ரூ. 73, 500 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் பறக்கும் படை அதிரடி.
தென்காசி மாவட்டம் வீரசிகாமணி விலக்கில் தேர்தல் பறக்கும் படையினர் கடையநல்லூர் வட்டம் டிஎன் புதுக்குடி- வீரசிகாமணி விலக்கில் பறக்கும் படை அலுவலர் பால்ராஜ் தலைமையில் இன்று அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, வாகனத்தில் கடையநல்லூர் இருந்து வீரசிகாமணி வந்த சிந்தாமணி மடத்து தெருவை சேர்ந்த சேகர் மகன் கலைராஜா (32) என்பவர் கைப்பையில் ரூ. 73, 500 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முறையான ஆவணம் இல்லாததால் அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் தனியார் தானியார் வங்கி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக பணியாற்றி வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 73, 500ஐ பறக்கும் படை அலுவலர் பால்ராஜ், உதவி ஆய்வாளர் மாடசாமி, காவலர்கள் இளையராஜா, தங்கராஜ், மனோகர் ஆகியோர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான அனிதா, தேர்தல் பிரிவு தாசில்தார் ரவி கணேஷ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story