உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹1.40 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹1.40 லட்சம் பறிமுதல்

பணம் ஒப்படைப்பு


money 

வாகன சோதனையில்உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ₹1.40 லட்சம் பறிமுதல்.
கெங்கவல்லி: கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில், தலைவாசல் அடுத்த சிவகங்கைபுரம் பகுதியில், புள்ளியியல் அலுவலர் பெரியசாமி தலைமையிலான பறக் கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடகவுண்டர் மகன் லட்சுமணன் என்பவரிட மிருந்து, டூவீலரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ₹52,670ஐ பறிமுதல் செய்தனர். இதே போல் கெங்கவல்லி-தம்மம்பட்டி சாலையில், மூலப்புதூர் பிரிவில் கெங்கவல்லி பிடிஓ தாமரைச்செல்வி தலைமையிலான பறக்கும் படை குழுவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆத்தூர் அருகே கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன்மகன் செல்லதுரை என் பவர் மினிஆட்டோவில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ₹87,600 பறிமுதல் செய்த இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ₹1,40,270ஐ கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி கூடுதல் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனர் அவர் ரொக்க பணத்தை கெங்கவல்லி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story