உளுந்தூர்பேட்டையில் 1.13 லட்சம் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் 1.13 லட்சம் பறிமுதல்

உளுந்துார்பேட்டை 

உளுந்தூர்பேட்டையில் 1.13 லட்சம் பறிமுதல் செய்து உளுந்துார்பேட்டை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.
உளுந்துார்பேட்டை தொகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் தீவிர வாகான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு சப் இன்ஸ்பெக்டர் அஷ்டலட்சுமி தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் 3:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த காட்டுச்செல்லுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பல்லவாடி பகுதியைச் சேர்ந்த முருகன், 29, என்பதும், அவர், வசூல் செய்த பணத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து உளுந்துார்பேட்டை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story