ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 6.94 லட்சம் பணம் பறிமுதல்

பணம் பறிமுதல்

கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 6.94 லட்சம் பணம் பறிமுதல்.
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி 6. 94 லட்ச ரூபாய் கொண்டுசெல்லப்பட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து நடந்த விசாரணையில் பீடி தொழில் செய்து வந்த ஜோலார்பேட்டையை சேர்ந்த ஞானசேகரன், சேலத்தில் பீடி வியாபாரத்தை முடித்துவிட்டு ஜோலார்பேட்டைக்கு உரிய ஆவணமின்றி 6. 94 லட்ச ரூபாய் கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அரூர் ஆர்டிஓ வில்சன்ராசசேகர் முன்னிலையில் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணனிடம் அந்த பணத்தை நேற்று மாலை ஒப்படைக்க அவர் அதனை அரூர் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Next Story


