மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி !

மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி  !

மரவள்ளிக்கிழங்கு

பரமத்திவேலூர் வட்டாரத்தில் வரத்து குறைந்த தால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பரமத்திவேலூர் சுற்றுவட்டார குதிகளான எஸ்.வாழவந்தி பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை,சின்னமருதூர்,சோழசிராமணி, பெருங்குறிச்சி,குஞ்சாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை விபாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். மரவள்ளிக்கிழங்கு களை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கி ழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்ப டையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையானது. 28 பாய்ன்ட்டுகள் வரை உள்ள மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வடைந்து ரூ.11 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது.

அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு கடந்தவாரம் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை உயர்வடைந்து ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைந்ததால் விலை உயர்வடைந்து உள்ளது. மரவள்ளிக்கிழங்கு விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story