நெல்லையில் மீண்டும் மாணவர்களுக்கு இடையே சாதிய மோதல்

நெல்லையில் மீண்டும் மாணவர்களுக்கு இடையே சாதிய மோதல்

காவல் நிலையம்

நெல்லையில் மீண்டும் மாணவர்களுக்கு இடையே சாதிய மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அரசு பள்ளியில், மாணவர்களுக்குள் சாதி ரீதியான பிரச்னை எழுந்ததாக கூறப்படும் நிலையில் 2 பேர் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதில் படுகாயமடைந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதுகுறித்து நாங்குநேரி காவல் ஆய்வாளர் நேரில் விசாரித்து வருகிறார். நாங்குநேரியை தொடர்ந்து நெல்லையில் மீண்டும் மாணவர்கள் இடையேயான சாதிய மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story