இளம்பெண்ணின் சாதியை சொல்லி திட்டிய கும்பல்

இளம்பெண்ணின் சாதியை சொல்லி திட்டிய கும்பல்
பெண்ணை தரக்குறைவாக பேசிய நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு
விருதுநகர் அருகே 4 பேர் சேர்ந்த கும்பல் திருமணம் ஆன பெண்ணை சாதிய ரீதியாக பேர் சொல்லி திட்டியதோடு அவரது கணவரையும் தாக்கியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கிழ உப்பிலிகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்கமாரி (37). இவர் கடந்த 29ஆம் தேதி இரவு 7 மணி 30 நிமிடம் அளவில் தனது வீட்டில் இருந்த போது அங்கு வந்த மீனா சத்தியமூர்த்தி காசி பாண்டியன் சதீஷ்குமார் ஆகிய நான்கு பேரும் தங்கமாரியின் மனைவி கார்த்திகாவை சாதி பெயரை சொல்லி திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுுளளனர்.

அப்போது ஏன் தனது மனைவியை திட்டுகிறீர்கள் என கேட்ட தங்கமாரியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆவியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story