கூலித் தொழிலாளி உயிரிழப்பு

கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பைல் படம்

உளுந்தாண்டார் கோவிலை சேர்ந்த கூலித் தொழிலாளி, மரத்திலிருந்து கீழே விழுந்த போது பரிதாபமாக உயிரிழந்தார்.
உளுந்தாண்டார்கோவில் புதுக்காலனியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்,35; கூலித் தொழிலாளி.இவர், கடந்த 8ம் தேதி மாலை அரச மரக்கிளைகளை வெட்டுவதற்காக மரத்தில் ஏறினார். அப்போது தவறி மரத்தில் இருந்து கீழ விழுந்தார். படுகாயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று முன்தினம் இறந்தார். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story