மின் கம்பி அறுந்து விழுந்து கால்நடைகள் உயிரிழப்பு

மின் கம்பி அறுந்து விழுந்து கால்நடைகள் உயிரிழப்பு

காவல் நிலையம் 

காரிமங்கலம் அருகே மோட்டூர் கிராமத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மின் கம்பி அறுந்து விழுந்தது இதில் மின்சாரம் தாக்கி 2 மாடுகள் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் பகுதியில் நேற்று அதிகாலை சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. அப்போது மோட்டூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவரது வீட்டின் அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து கம்பி அறுந்து விழுந்தன. இந்த கம்பிகள் வீட்டு அருகே கட்டி வைத்திருந்த 2 மாடுகளின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி 2 மாடுகளும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் காரிமங்கலம் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story