காரிமங்கலம் வாரச்சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்

காரிமங்கலம் வார சந்தையில் ரூ. 93 லட்சத்திற்கு ஆடுகள்,மாடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள் விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வார சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலை, சேலம் ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செய்கின்றனர் நேற்று நடைபெற்ற வார சந்தையில் 600க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டு 65 லட்சத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டுவரப்பட்டு 23 லட்சத்திற்கும், நாட்டுக்கோழிகள் ஒரு லட்சத்திற்கும் என மொத்தம் 93 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story