வாய்க்கால் மேட்டுப்புதூரில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு

வாய்க்கால் மேட்டுப்புதூரில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு

  வாய்க்கால் மேட்டுப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாகிறது. 

வாய்க்கால் மேட்டுப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாகிறது.

இந்த நிலையில் முத்தூர் வெள்ளகோவில் சாலை வாய்க்கால்மேட்டுப்புதூர் பஸ் நிறுத்தம் அருகில் காவிரி பிரதான குடிநீர் குழாயில் கடந்த 6 மாதங்க ளுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. குடிநீர் சாலை யில் வீணாகி வருகிறது. மேலும் தேங்கி நிற்கும் நீரினால் அப்பகுதி முழுவ தும் ஒரே சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை கடந்து வாகனங் கள் செல்லும் போது வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது.

குடிநீர் தேங்கி நிற்கும் தண்ணீரில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புள்ளது. உடைப்பு காரணமாக வெள்ளகோவில் நகர் பகுதிகளில் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story