ஏரிகளில் காவிரி நீர் நிரப்பும் பணிகள்: எம்எல்ஏ கதிரவன் நம்பிக்கை

ஏரிகளில் காவிரி நீர் நிரப்பும் பணிகள்:    எம்எல்ஏ கதிரவன் நம்பிக்கை

வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெரமங்கலத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேருவுக்கு மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெரமங்கலம் கிராமத்தில் எம்எல்ஏ கதிரவன் வாக்கு சேகரித்து பேசியதாவது, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இளமையானவர், நன்றாக ஆங்கிலம் பேசக்கூடியவர் அருண் நேரு.

இந்த தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை பாராளுமன்றத்தில் பேசி பெற்றுத் தருவார்.குடிநீர் வழங்குவது, ஏரிகளில் காவிரி உபரிநீர் நிரப்பும் பணிகளை அருண்நேரு செய்யா விட்டாலும், இவரது தந்தை அமைச்சர் கே.என்.நேரு செய்து முடிப்பார்” என்றார். வே

ட்பாளர் அருண்நேரு பேசுகையில், உங்கள் நெடுங்கால கோரிக்கையான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இன்னும் 3 மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து மக்களுக்கு தடை யின்றி குடிநீர் வழங்கப்படும்.

காவிரி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் கடலில் கலக்கும் உபரி நீரை நீரேற்று பம்ப் மூலம் கொண்டு சென்று ஏரி, குளங்களை நிரப்ப ஆய்வு நடந்து வருகிறது, என்றார். இதனைத் தொடர்ந்து மூவானூர், காட்டுக்குளம், மணியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பிரச்சாரத்தில், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசபெருமாள், செந்தில், கருணைராஜா உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story