அம்பேத்கர் சிலைக்கு சிபிஐ கட்சியினர் மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு சிபிஐ கட்சியினர் மரியாதை

 அம்பேத்கர் பிறந்தநாள் விழா

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு சிபிஐ கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் 134 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு நகரச் செயலாளர் வழக்கறிஞர் மருது தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நகர துணை செயலாளர்கள் சகாயம், பாண்டி மற்றும் ஆட்டோ சங்க நகரச் செயலாளர் பாண்டி, நகர்க்குழு உறுப்பினர்கள் உடையார், ஆண்டிச்சாமி அண்ணாமலை, சேகர், ராஜாராம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story