தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம்

தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் மழை வெள்ள  பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி சி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் மழை வெள்ள  பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி சி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், மாநில அரசு கோரியுள்ள நிதியினை ஒன்றிய அரசு முழுமையாக உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் நடந்தது. பள்ளிபாளையம் பிரிவில் நடந்த ஆர்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் ஈஸ்வரன், அர்த்தநாரி, விஜய்ஆனந்தன், கார்த்திகேயன், கிருஷ்ணசாமி, மணிவேலன், மனோகரன் சரசு, அம்சவேணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story