முறையாக பராமரிக்கப்படாத சிசி டிவி கேமராக்கள்

திருச்செங்கோடு பகுதிகளில் முறையாக பராமரிக்கப்படாத சிசி டிவி கேமராக்கள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுமார் 60 லட்சம் மதிப்புள்ள ரூபாய் 350 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது, திருச்செங்கோடு பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு இருந்தது அதற்கான ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது பல இடங்களில் கேமராக்கள் சரிவர இயங்கவில்லை, மேலும் மின் கம்பங்களில் கேமராக்களை பொருத்தி உள்ளதால் மின்வாரிய ஊழியர்கள் கம்பங்களில் ஏறுவதற்கு சிரமமாக உள்ளது என கூறுகின்றனர், எனவே கேமராவிற்கு என்று தனி கம்பங்கள் அமைத்து சரியாக பராமரிக்கப்பட வேண்டும் கேமராக்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் சரியாக அனைத்து கேமராக்களையும் பராமரிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story