திருப்பத்தூர் அருகே அரசு பேருந்தில் வாலிபர் தவறி விழுந்த சிசிடிவி காட்சி

திருப்பத்தூர் அருகே  அரசு பேருந்தில் வாலிபர் தவறி விழுந்த சிசிடிவி காட்சி

அரசு பேருந்தில் தவறி விழுந்த வாலிபர்

திருப்பத்தூர் அருகே அரசு பேருந்தில் ஏற முயன்ற வாலிபர் கீழே தவறி விழுந்த பதப்பதக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்தில் ஏற முயன்ற வாலிபர் கீழே தவறி விழுந்த பதப்பதக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு திருப்பத்தூர் அருகே வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வரதபாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் ஆறுமுகம் (36) இவர் பெங்களூரில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய பெரியப்பாவான அண்ணாமலை திருப்பத்தூர் அடுத்த சித்திதேரி பகுதியில் இறந்து விடுகிறார். இவருடைய இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பெங்களூரில் இருந்து திருப்பத்தூருக்கு வந்துள்ளார்.

அப்போது அண்ணாநகர் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தபோது ஞானசேகரன் என்ற ஓட்டுநர் அரசு பேருந்து ஓட்டி வந்துள்ளார் அப்போது பேருந்தை நிறுத்தி ஆறுமுகம் பேருந்தில் ஏற முற்படும்போது திடீரென தவறி கீழே விழுந்து விடுகிறார். இதனால் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மே

லும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு பேருந்தில் ஏற முற்படும்போது தவறி விழுந்த பதப்பதக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரு பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story