ராசிபுரம் அருகே வாகனத்தில் இருந்த பேட்டரி திருடும் சிசிடிவி காட்சி வைரல்

ராசிபுரம் அருகே வாகனத்தில் இருந்த பேட்டரி திருடும் சிசிடிவி காட்சி வைரல்

பேட்டரி திருடும் மர்மநபர்கள்

ராசிபுரம் அருகே ஆறு டிப்பர் வாகனத்தில் இருந்த பேட்டரி பொருட்கள் திருட்டு சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வையப்பமலை பகுதியில் ஆறு டிப்பர் வாகனங்களில் இருந்த பேட்டரி பொருட்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

ராசிபுரம் டு திருச்செங்கோடு முக்கிய சாலை பகுதியில் அண்ணாமலையார் காம்ப்ளக்ஸ் வளாகம் பகுதி அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச்செல்லும் டிப்பர் வாகனங்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு வியாழக்கிழமை நள்ளிரவு மழையின் காரணமாக ஆறு வண்டிகள் வாகன ஓட்டுநர்கள் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த,

மகாலட்சுமி டிப்பர் லாரி ஐந்து வாகனமும், கரிய காளியம்மன் டிப்பர் லாரி ஒன்றும் மொத்தம் ஆறு வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே இந்தப் பகுதிக்கு நள்ளிரவு வேளையில் மர்ம நபர்கள் ஆம்னி வாகனத்தில் வந்து ஆறு வண்டியில் இருந்த பேட்டரி பொருட்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது.

இதை எடுத்து தகவல் அறிந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் மோகன்ராஜ் , செந்தில் ஆகியோர் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்டு சம்பவ இடத்தில் பார்வையிட்ட எலச்சிபாளையம் காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியப்போக்கோடு செயல்படுவதாகவும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் ஒரு பேட்டரியின் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் மொத்தம் ஒன்றரை லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதால் டிப்பர் லாரி உரிமையாளர் இடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story