இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வைரல்!

திருப்பூரில் பனியன் தொழிலாளியின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
திருப்பூரில் பனியன் தொழிலாளியின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது. திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த சரவணன் பனியன் தொழிலாளியான இவர் திருவிக நகர் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இதனிடையே நேற்று இரவு வழக்கம் போல் பின்னலாடை நிறுவனத்தின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றவர் வேலை முடிந்து மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனமானது காணவில்லை இதை அடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் சரவணின் இரு சக்கர வாகனத்தை லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகன்றனர்.தற்போது இது குறித்த சிசிடி காட்சிகளானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story