தலைகீழாக தொங்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவை சரி செய்யணும் !

தலைகீழாக தொங்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவை சரி செய்யணும் !

 ஆத்தூரில் குற்றச்சம்பாவங்களை தடுக்க அரசு மருத்துவமனை வளாகத்தில் அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா தலைகீழாக உள்ளது. 

ஆத்தூரில் குற்றச்சம்பாவங்களை தடுக்க அரசு மருத்துவமனை வளாகத்தில் அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா தலைகீழாக உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் காமராஜனார் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை மற்றும் போக்குவரத்து காவல் அலுவலகம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ளது மேலும் இப்படி பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள CCTV கண்காணிப்பு கேமரா தலைகீழாக தொங்கி வருவதால் அப்பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத அவல நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story