பேரறிஞர் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

பேரறிஞர் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
பேரறிஞர் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி மௌன அஞ்சலி செலுதப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்,வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் , காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய திமுக கழகம் சார்பில் திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தையொட்டி, வீராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் டில்லி ஏற்பாட்டில், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலையில், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் தலைமையில் பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் அண்ணாவின் அலங்கரிக்கப்பட்ட திருவுறுவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து இல்லத்துவாசுகளிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, இதனை தொடர்ந்து வீராபுரம் கிராமத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுறுவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டு, 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம், இளைஞர் அணி நிர்வாகி பார்த்தன், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story