கொரடாச்சேரி: அண்ணாவின் நினைவு நாள் அனுசரிப்பு

கொரடாச்சேரி: அண்ணாவின் நினைவு நாள் அனுசரிப்பு

அண்ணா நினைவு நாள்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் திமுக சார்பில் அண்ணாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

கொரடாச்சேரி கடைவீதியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கொரடாச்சேரி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் கலைவேந்தன், ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர் ,சேகர் என்கிற கலியபெருமாள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story