மயிலாடுதுறையில் 42வது ஆண்டாக குடும்பமாக தீபாவளி கொண்டாட்டம் 

மயிலாடுதுறையில் 42வது ஆண்டாக குடும்பமாக தீபாவளி கொண்டாட்டம் 

குடும்பத்துடன் தீபாவளி 

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் தெற்கு வீதியில் உள்ள கமலாம்மாள் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 2 மகள் மற்றும் 4 மகன்கள் உள்ள நிலையில், அனைவரும், திருமணம் முடித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர், தீபாவளி பண்டிகை விழா வந்துவிட்டால், குடும்பத்தினர் எந்த ஊரில் இருந்தாலும் தீபாவளி பண்டிகைக்கு மயிலாடுதுறையியில் ஒன்று கூடி விடுகின்றனர். அதேபோல் இந்த 42வது ஆண்டில் அனைத்து ஊர்களில் வசிக்கும் கமலாம்மாளின் மகன்கள், மகள்கள் அவர்களது குடும்பத்தினருடன் தாங்கள் பிறந்த ஊரான மயிலாடுதுறைக்கு வந்து தங்கள் சொந்த வீட்டில் தங்கி, அதிகாலையிலேயே எழுந்து, தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். கமலாம்மாளின் பேரன் பிரேம்பகுமார்-சுவேதா தம்பதியினருக்கு தலைதீபாவளி என்பதால் உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடி கமலாம்பாளிடம் ஆசி பெற்று இனிப்புகள் உண்டு மகிழ்ந்தனர். குடும்ப புகைப்படம் எடுத்துக்கொண்டு உற்சாகமாக அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story