ஆரோக்யா மகளிர் மருத்துவமனையில் லீப் ஆண்டில் பிறந்த குழந்தைகளுக்கு விழா

ஆரோக்யா மகளிர் மருத்துவமனையில் லீப் ஆண்டில் பிறந்த குழந்தைகளுக்கு விழா

சேலம் ஆரோக்யா மகளிர் மருத்துவமனையில் லீப் ஆண்டில் பிறந்த குழந்தைகளுக்கு விழா மருத்துவமனையில் நடந்தது


சேலம் ஆரோக்யா மகளிர் மருத்துவமனையில் லீப் ஆண்டில் பிறந்த குழந்தைகளுக்கு விழா மருத்துவமனையில் நடந்தது

சேலம் 3 ரோடு ஆரோக்யா மகளிர் மருத்துவமனையில் கடந்த 29-ந் தேதி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் ஆண்டில் 11 குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு மருத்துவமனை சார்பில் விழா எடுக்கப்பட்டது. மருத்துவமனை தலைவர் ராணி வரதராஜூ தலைமை தாங்கினார்.

விழாவில் குழந்தைகளுக்கு கேக் வெட்டி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதுடன், மருத்துவமனையில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் டாக்டர்கள், ஊழியர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில் இயக்குனர் சுதாகர், நிர்வாக ஆலோசகர் சேவகமூர்த்தி, டாக்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story