கண்டமங்கலம் அருகே விபத்தில் செல்போன் கடை ஊழியர் பலி

கண்டமங்கலம் அருகே விபத்தில் செல்போன் கடை ஊழியர் பலி

 கண்டமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் செல்போன் கடை ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கண்டமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் செல்போன் கடை ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் அருகே உள்ள ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவருடைய மகன் சுந்தர் (வயது 25). இவர் திருமணமாகி திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான கொடுக்கூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார், புதுச்சேரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் சுந்தர் வேலைபார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு வேலை முடிந்து பத்து கண்ணு வழியாக புதுச்சேரியில் இருந்து கொடுக்கூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே குமாரப்பாளையம் பகுதியை கடந்த போது திடீரென நிலை தடுமாறி சாலையின் குறுக்கே இருந்த தடுப்புக் கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சுந்தர் தூக்கி வீசப்பட்டார்.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story