குலசேகரம் அருகே தொழிலாளியிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு

குலசேகரம் அருகே தொழிலாளியிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு

வாலிபர் கைது

குலசேகரம் அருகே  தொழிலாளியிடம் நூதன முறையில் செல்போன் பறித்த வாலிபர் கைது
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே மாஞ்ச கோணம் பகுதி சேர்ந்தவர் சஞ்சு (30). தேன் பெட்டி தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் திருவட்டார் பாலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு ஏற்கனவே அறிமுகமான ஆற்றூர் பகுதியை சேர்ந்த அனிஸ் (25) என்பவர் அங்கு வந்து, சஞ்சுவிடம் அவசரமாக ஒரு போன் செய்ய வேண்டும் உங்கள் செல்போனை தர முடியுமா என்று கேட்டு வாங்கியுள்ளார். அறிமுகம் ஆனவர் என்பதால் சஞ்சு செல்போனை கொடுத்துள்ளார். சற்று தொலைவில் நின்று அனிஷ் போன் பேசியுள்ளார். தொடர்ந்து பேசிப் பேசி தூரமாக சென்று, பின்னர் திடீரென மாயமாகி விட்டார். உடனடியாக சஞ்சு அனிசின் வீட்டிற்கு தேடி சென்று செல்போனை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு தகாத வார்த்தை பேசி மிரட்டி சஞ்சுவை அனீஸ் சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். இதில் அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதை பார்த்த அனீஸ் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். காயம் அடைந்த சஞ்சு குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலி சார் அனீஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story