செல்போன் டவரில் பேட்டரி திருட்டு - 2 பேர் கைது

செல்போன் டவரில் பேட்டரி திருட்டு - 2 பேர் கைது
கைதானவர்கள்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் இருளப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். தனியார் செல்போன் டவர் கம்பெனி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சுங்கான்கடையில் உள்ள இவர்களது டவரில் உள்ள 7 போட்டரிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு காணவில்லை. இதுகுறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரணியல் போலீசார் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தனர். விசாரணையில் அவர்கள் கட்டச்சகுழி கோட்டிகால்கோணம் பகுதியை சேர்ந்த வினோத் (28), சுங்கான்கடை பிராந்தநேரியை சேர்ந்த அருணாச்சலம் (32) என்பதும் தெரிய வந்தது. இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சுங்ககடை செல்போன் டவரில் உள்ள பேட்டரிகளை திருடியதும், குருந்தன்கோடு ஆசாரிவிளையில் உள்ள ஒரு ஆக்கர் கடையில் திருடி இருந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பணத்தை கைப்பற்றிய போலீசார் இருவரையும் கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

Tags

Next Story