புதிரை வண்ணார் சமூக மக்கள் கணக்கெடுப்பு பணி

புதிரை வண்ணார் சமூக மக்கள் கணக்கெடுப்பு பணி

ஆட்சியர் சாந்தி 

தமிழகத்தில் முன்னோடி முயற்சியாக புதிரை வண்ணார் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் தலை மையில், புதிரை வண்ணார் சமூகத்தின் சமூகபொருளாதார நிலையை கண்டறிவ தற்காக, மாநிலம் முழுவதுமாக இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்காக இப்போஸ் என்ற பிரபல ஆராய்ச்சி நிறு வனத்தை, தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநனரகம் நியமித் துள்ளது.

இந்த நிறுவனம், துறை அதிகாரிகள், புதிரை வண்ணார் நலவாரிய உறுப் பினர்கள், உள்ளூர் சமூகத் தினர் மற்றும் அரசு பிரதி நிதிகளுடன் ஆலோசனை நடத்தி, கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது. இதனை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் செயல் முறைகளை விளக்கி வருகின்றன. இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதை உறுதி செய்ய, அனைத்து கிராமங்களிலும் கணக்கெடுப்பு பற்றிய பரவலான தகவல்களை எடுத்து செல்ல ஆதரவு கேட்டுக் கொண்டனர்.

கணக்கெடுப்பு குழு ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, கிராம அளவிலான மற்றும் குடும்ப அளவிலான கணக்கெடுப்பை நடத்தும். மேலும், அவர்களிடம் நேரடியாக தகவல்களை பெற்று ஆய்வு செய்யும்.சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகள், புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை மேம்ப டுத்த தமிழக அரசு உரிய கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த சமூக மக்களின் விவரங்களை நேரடி கள ஆய்வு மூலம் மேற்கொள் ளப்படுவதால் அவர்களின் நலத்திட்டங்களை மேற்கொள்ள துல்லியமான ஆய்வு முடிவுகளை இப்சோஸ் நிறுவனம் வழங்கும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story