மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு !

மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு !

வாக்கு சேகரிப்பு

மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதிமாறன் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு

மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதிமாறன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட துறைமுகம் மேற்கு பகுதி 59வது வட்டத்தில் உள்ள

எல்லீஸ் சாலை, குலா முத்துசா தெரு, திப்பு தெரு, எல்லீஸ் புரம், பங்காரு தெரு, முத்துருன்னிசா பேகம் தெரு, உனிசாலித் தெரு, பாலமுத்து தெரு, பங்காரு தெரு, தாயார் தெரு ஆகிய தெருக்களில் பிரச்சாரம் செய்தார்.

மேலும் சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சருமான சேகர்பாபு மற்றும் பகுதிக் கழகச் செயலாளர் எஸ்.முரளி அவர்களுடன் வாக்குகளை சேகரித்தார்.

உடன் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுக இளைஞரணி துணைச் செயலாளரும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான க.பிரபு, பகுதிக் கழகச் செயலாளர் எஸ்.ராஜசேகர், மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி, வட்டக் கழகச் செயலாளர் வே.பா.பிரபாகரன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story