மத்திய அரசின் தொழில் பயிற்சி முகாம்

மத்திய அரசின் தொழில் பயிற்சி முகாம்

வடதொரசலூர் டி.எல்.எம்., தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மூன்று நாள் சிறப்பு தொழிற்பயிற்சி முகாம் நடந்தது.

வடதொரசலூர் டி.எல்.எம்., தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மூன்று நாள் சிறப்பு தொழிற்பயிற்சி முகாம் நடந்தது.
தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர் டி.எல்.எம்., தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் சீட் டிவிசன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் நிதி உதவியுடன் திருக்கோவிலூர் டான் இன்ஸ்டியூட் ஆப் ரூரல் டெவலப்மென்ட் நிறுவனம் சார்பில் தொழிற்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தபட்ட சமூகத்தை சார்ந்தவர்களுக்காக நடத்தப்பட்ட முகாம் 3 நாட்கள் நடந்தது. இதில் பயிற்றுனர்கள் சகாதேவன், கோகிலா, சுமதி ஆகியோர் தையல், ஆரி, சனல் பை தயாரித்தல் உள்ளிட்ட சிறுதொழில் பயிற்சி அளித்தனர்.

Tags

Next Story