தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டில் சமூக நலம், மகளிர் உரிமைத்துறை சார்பில் திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம்,சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தனியார் கல்லூரி வளாகத்தில் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்..இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் ,திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி., நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம். கே. டி. கார்த்திக் தண்டபாணி,காட்டாங்குளத்தூர் ஊராட்சி மன்ற குழு தலைவர் உதயா கருணாகரன், மறைமலைநகர் நகர மன்ற துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன்,சமூக நலத்துறை உயர் அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள், பயனாளிகள், என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story