மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா

மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி தொழிற்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி தொழிற்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி தொழிற்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி கணினி துறைத் தலைவா் ஜே.செந்தில்குமாா் வரவேற்றாா். முதல்வா் ஜி.இளங்கோவன் அறிக்கை வாசித்தாா். நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி முதல்வா் ராஜா, கல்லூரி துறைத் தலைவா்கள் வெங்கடசுப்பிரமணியன், பிரபு, இளவழகன், ஆதிகேசவன், அலுவலக கண்காணிப்பாளா் பட்டு, நிா்வாக அலுவலா் அரிகிருஷ்ணன், தனியாா் நிறுவனங்களின் உயா் அதிகாரிகள் கிருஷ்ணன், சுப்பிரமணி, மணிமாறன், சுரேஷ், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனியாா் நிறுவனங்களில் பணியாற்ற நியமன ஆணைகளை கல்லூரித் தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் வழங்கினாா். மாவட்ட அளவில் நடைபெற்ற அத்லெத்டிஸ் போட்டிகளில் முதலிடம் பெற்று பரிசு கோப்பை வென்ற அணியினரைப் பாராட்டினாா். ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி முதல்வா், கல்லூரி முதலாண்டு துறைத் தலைவா் கே.நித்தியானந்தம் நன்றி கூறினாா்.

Tags

Next Story