நகர்ப்புற வேலைவாய்ப்புக்கான அடையாள அட்டை வழங்கும் விழா

நகர்ப்புற வேலைவாய்ப்புக்கான அடையாள அட்டை வழங்கும் விழா


சேலம் கருப்பூர் பேரூராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்புக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.


சேலம் கருப்பூர் பேரூராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்புக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.

சேலம் கருப்பூர் பேரூராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி இந்த திட்ட பணிகளில் சேர கருப்பூர் பேரூராட்சியில் 15 வார்டுகளை சேர்ந்த சுமார் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர தி.மு.க. செயலாளரும், கவுன்சிலருமான பி.லோகநாதன் வரவேற்றார்.

செயல் அலுவலர் நீலாதேவி, பேரூராட்சி துணைத்தலைவர் சாந்தி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் சுலோச்சனா சிலம்பரசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் மோகனன், கோமதி, நிர்மலா, சுபா, திவ்யா மணிகண்டன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் மகேசுவரி நன்றி கூறினார்.

Tags

Next Story