ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மணக்காலில் தூய சகாய அன்னை ஆலய புனித வின்சன் தே பால் சபையின் சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


மணக்காலில் தூய சகாய அன்னை ஆலய புனித வின்சன் தே பால் சபையின் சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த மணக்காலில் உள்ள தூய சகாய அன்னை ஆலயத்தின் புனித வின்சென்ட் தே பால் சபையின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தூய சகாய அன்னை ஆலய பங்குத்தந்தை ஜூடு முத்துசெல்வன் தலைமை வகித்தார்.

தலைவர் பால் லூர்து சாமி,செயலாளர் லாரன்ஸ் சுந்தரம், பொருளாளர் செபாஸ்டின் தாமஸ் ஆகிய முன்னிலை வகித்தனர்.துணைத் தலைவர் அலெக்ஸ் வரவேற்புறையாற்றி பேசினார். இந்நிகழ்வில் வட்டாரப் பொறுப்பாளர்கள் மார்ட்டின்,துரைராஜ், ராஜேந்திரன், அருட் சகோதரர் எட்வின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையற்றி ஏழை,எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். முடிவில் ஜோஸ் விஜயன் நன்றி உரை வழங்கினார்.

Tags

Next Story