மாவட்ட அலுவலகங்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம்

மாவட்ட அலுவலகங்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம்

செங்கல்பட்டு மாவட்ட அலுவலா்களுக்கு கொடிநாள் பணியில் சிறப்பாக பணியாற்றியதற்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்ட அலுவலா்களுக்கு கொடிநாள் பணியில் சிறப்பாக பணியாற்றியதற்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,ஊரக வளா்ச்சி அலகில் 2018-2021 ஆண்டுகளில் கொடிநாள்வசூல் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூல் செய்த 8 மாவட்ட அலுவலா்களுக்கு 30 கிராம் வெள்ளிப்பதக்கம் மற்றும் தலைமைச் செயலரால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.5 லட்சம் மேல் வசூல் செய்த 8 மாவட்ட அலுவலா்களுக்கு 30 கிராம் வெள்ளி பதக்கங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் வழங்கினாா்.

உடன் மாவட்டவருவாய் அலுவலா் சுபா நந்தினி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆனந்த் குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வின், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜோதிசங்கா், மாவட்டஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வெற்றிகுமாா், மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story