பள்ளி மேலாண்மை குழுவிற்கு பாராட்டு சான்றிதழ்

பள்ளி மேலாண்மை குழுவிற்கு பாராட்டு சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய பள்ளி மேலாண்மை குழுவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

சிறப்பாக பணியாற்றிய பள்ளி மேலாண்மை குழுவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மை குழு மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் பள்ளி மேலாண்மை குழு மாநாட்டில், பள்ளிபாளையம் ஒன்றியத்தின் சார்பாக சிறந்த பள்ளி மேலாண்மை குழுவுக்கான பாராட்டுச் சான்றிதழ் பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கிடைத்தது. இந்நிலையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழை காட்டி பாராட்டு பெற்றனர். நிகழ்வின் பொழுது பள்ளி ஆசிரியைகள் மாணவிகள் என பலர் உடன் இருந்தனர் .

Tags

Next Story