தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள்

தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு  சான்றிதழ்கள்
 செங்கோட்டையில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
செங்கோட்டையில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் முத்து பயிற்சி மையத்தில், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்தவா்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. பயிற்சி மைய நிா்வாகி தங்கம் தலைமை வகித்தாா். செங்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் இளவரசி, பயிற்சி முடித்த 50 பேருக்கு சான்றிதழ்கள், உபகரணங்களை வழங்கினாா்.

Tags

Next Story