சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு விரைவில் சான்றிதழ்-ஆட்சியர் தகவல்

சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு விரைவில் சான்றிதழ்-ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி ஆட்சியர் 

திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் விரைவில் சான்றிதழ் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17,18 ஆம் தேதிகளில் பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு சான்றிதழ்களை இழந்த பொதுமக்கள் மீண்டும் தங்களது சான்றிதழ் பெறுவதற்கு நேற்று 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.

இதுகுறித்து பரிசீலித்து விரைவில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.மேலும் மழை வெள்ளபாதிப்பினால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை இழந்த மாணவர்- மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள உயர்கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்து கட்டணமின்றி தங்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை பெற தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story