அவிநாசியில் தங்க சங்கிலி பறிப்பு

அவிநாசியில் தங்க சங்கிலி பறிப்பு

திருட்டு 

அவிநாசியில் தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பேரை அவினாசி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவிநாசிபோலீஸார்ஆட்டையாம்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இருவரும் உரிய பதில் அளிக்காததால், போலீஸார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிரவிசாரணைமேற்கொண்டனர்.அவர்கள் கருமத்தம்பட்டி வாகராயம்பாளையத்தை சேர்ந்த விமல்குமார் (19) மற்றும் சந்தோஷ்(25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த வாரம் அவிநாசி வெள்ளியம்பாளையம் அருகே இருசக்கர வாகனதசென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story