மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறிக்க முயற்சி

மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறிக்க முயற்சி

பைல் படம் 

தொட்டியத்தில் மின் வாரிய ஊழியரிடம் நகை பறிக்க முயற்சித்து கத்தியால் வெட்டி தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொட்டியம் காந்தி நகரைச் சோ்ந்தவா் ரத்தினவேல், இவா், சாலை ஆய்வாளராக வேலை பாா்த்து வருகிறாா் . இவரது மனைவி திலகவதி (55). இவா் நாமக்கல் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறாா். திலகவதி செவ்வாய்க்கிழமை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திலிருந்து வந்தபோது அங்கு மறைந்திருந்த மா்ம நபா் திலகவதியின் கழுத்தில் கிடந்த தாலி செயினை கத்தியை காட்டி பறிக்க முயன்றாா். அப்போது, திலகவதி கூச்சலிட்டாா்.

இதையடுத்து மா்மநபா் திலகவதியின் உடலில் கத்தியால் கிழித்து விட்டு தப்பி சென்றாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் திலகவதியை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். புகாரின் பேரில் தொட்டியம் காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story