குமரி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

குமரி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு
பைல் படம்
திங்கள்சந்தை அருகே இரவில் வீட்டிற்கு சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் மணி. விவசாயி. இவரது மனைவி ராஜம் என்பவர் நேற்று வெளியே சென்று விட்டு, இரவு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். புது விளை பகுதியில் சென்ற போது பைக்கில் வந்த இரண்டு பேர் ராஜத்திடம் தக்கலைக்கு எப்படி செல்ல வேண்டும் என வழி கேட்டுள்ளனர். ராஜம் வழி சொல்லிக் கொண்டிருக்கும் போது திடீரென பின்னால் அமர்ந்திருந்த நபர் அவரது கழுத்தில் கடந்த 6 பவுன் எடையுள்ள செயினை பறித்துள்ளார். செயினை பறித்துக் கொண்ட திருடர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story