தாலியை திருடிய இருவர் ; தேடும் போலீஸார்!

தாலியை திருடிய இருவர் ; தேடும் போலீஸார்!

பைல் படம் 

வீட்டின் முன் துணி துவைத்துக் கொண்டிருந்த இளம் பெண்ணின் தங்க தாலியை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (31). ஆட்டோ டிரைவர், மனைவி ஈஸ்வரி (21) தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. இதனால் குழந்தையை பார்த்துக் கொண்டு ஈஸ்வரி வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் நேற்று வீட்டின் முன்பு ஈஸ்வரி குழந்தையின் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வழியாக ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் ஈஸ்வரி கழுத்தில் இருந்த அரை பவன் தங்கதாலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி சத்தம் போட்டால் அக்கம் பக்கத்தில் வந்து முயற்சி செய்தும் மர்ம ஆசாமிகளை பிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் மேல் குன்னூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தாலியை பறித்து சென்ற மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags

Next Story