சாலைகள் அமைக்கும் பணிகளை சேர்மன் ஆய்வு

திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைகள் அமைக்கும் பணிகளை சேர்மன் நளினி சுரேஷ்பாபு ஆய்வு செய்தார்.
திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சூரியம்பாளையம் செப்பறை மாங்குட்டை பாளையம்,செப்பறை, சக்திவேல் நகர், ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Tags

Next Story