மாநில கைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம்

மாநில கைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம்

சேலத்தில் மாநில கைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


சேலத்தில் மாநில கைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில், சேலம் உள்பட 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மகளிர் கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதன் இறுதிப்போட்டியில் ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும், தங்கப்பதக்கத்தையும் தட்டி சென்றது.

இதனை தொடர்ந்து சாம்பியன் பட்டம் பெற்ற அந்த கைப்பந்து அணி மாணவிகளை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு சேலம் அழகாபுரத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதற்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகளை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர் ராஜாராம், கைப்பந்து பயிற்சியாளர் பரமசிவம், நிர்வாகி நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story